Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha
பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்
பயங்கரவாத மற்றும் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக விசேட நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி இந்த நீதிமன்றம் அமைக்கப்படுகிறது.
இதன்மூலம் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பானவர்களின் வழக்குகளை துரிதப்படுத்த முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


