Headlines
Published On:Friday, September 6, 2013
Posted by NIsha

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு வரிச்சலுகை வழங்க அரசு தீர்மானம்

இலங்கையில் அமைக்கப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் நிறுவப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் மத்திய லங்ஷெயர் பல்கலைக்கழகத்தின் கிளை, மீரிகமவில் அமைக்கப்பட உள்ளது. இதன்படி நேற்று அரசாங்கம் வரிச் சலுகை தொடர்பில் பாராளுமன்றில் சட்டமொன்றை சமர்ப்பித்துள்ளது.

பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு வரிச்சலுகை வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Posted by NIsha on 6:52 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:52 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for " வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு வரிச்சலுகை வழங்க அரசு தீர்மானம்"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive