Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட அனுபவங்கள் பற்றி மனம் திறக்கிறார் சிவகார்த்திக்கேயன்.
சிவகார்த்திக்கேயன் ஹீரோவாக நடித்து இன்று வெளியாகும் படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.
இப்படத்தில் இவருடன் சத்யராஜும் ஜோடி சேர்ந்துள்ளார். சிவகார்த்தியன் சரியான கிண்டல் பேர்வழி என்றால், சத்யராஜ் அவருக்கும் முன்னோடி. தன்னுடைய நக்கல் டயலாக்குகளால் மற்றவர்களைக் கலாய்ப்பவர் சத்யராஜ், இப்படத்தில் அவரைக் கஷ்டப்பட்டு கலாய்த்ததாக மனம் திறந்துள்ளார் சிவகார்த்திக்கேயன்.
சத்யராஜுடன் தனது நடிப்பு அனுபவங்களை பற்றி சிவகார்த்திக்கேயன் கூறியதாவது....
அழகான கிராமத்துல நடக்கிற காமெடியான கதை இது. நான் போஸ் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட தலைவராக நடிக்கிறேன். இந்த சங்கத்தின் செயலாளராக சூரி நடித்திருக்கிறார்.
அந்த ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும் நாங்கதான் முன்னால நிப்போம். பேனர், கொடின்னு ஏரியா முழுக்க எங்க ராஜ்யம்தான் கொடிகட்டி பறக்கும்.
இது பிடிக்காமல், எங்களுக்கு எதிராக முறுக்கிட்டு நிற்கிறார் சிவனாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யராஜ். அதன்பிறகு எங்கள் இரண்டு அணிக்கும் நடக்கிற ஜாலியான மோதல்கள்தான் படத்தோட கதை.
சத்யராஜ் சாரை பார்த்ததும் முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால், அவரோ ரொம்பவும் சகஜமாக பழகினார். ஒரு சீன்ல அவரை கலாய்க்கலாம்னு ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா' என்று அவர் ஸ்டைல்ல சொன்னேன். அவர் ரொம்பவும் ரசிச்சார்.
ரொம்பவும் தெனாவட்டாக, கெத்தாக திரியுற என்னோட கதாபாத்திரமும், எனக்கு எதிராக இருக்கிற சத்யராஜ் சார் கதாபாத்திரமும் ரொம்பவும் பேசப்படும்.
இந்த படம் யாரையும் வருத்தப்பட வைக்காது. இடைவெளியே இல்லாம சிரிக்க வைக்கும்' எனத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திக்கேயன்.
மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



