Headlines
Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha

ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரியவந்துள்ளனர்.

இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது.

இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த பகுதியில் எரிந்த அடையாளங்கள் இன்று காலை காணப்பட்டன.

இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

இவர் இலங்கை தமிழர் தான் என்பதையும் காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

About the Author

Posted by NIsha on 6:31 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:31 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive