Headlines
Published On:Thursday, August 29, 2013
Posted by NIsha

புலிகளின் ஓடுபாதையை பயன்படுத்திய முதல் வெளிநாட்டு பிரமுகர் நவநீதம்பிள்ளை

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, சிறிலங்கா விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்ட அவர், நேற்றுமுன்தினம் மாலை இரணைமடு ஓடுபாதைக்கு சென்றார். அங்கிருந்து ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவுடன், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஏ.60 விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையைப் பயன்படுத்திய முதலாவது உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர் நவநீதம்பிள்ளையே என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Posted by NIsha on 11:19 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 11:19 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "புலிகளின் ஓடுபாதையை பயன்படுத்திய முதல் வெளிநாட்டு பிரமுகர் நவநீதம்பிள்ளை"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive