பேஸ்புக் காதலனை தேடி இந்தியாவுக்கு சென்ற மலேசிய பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய நாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கிறார். அவருக்கு பேஸ்புக் மூலம் கேரள மாநிலம் திரூரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, போன் மூலமும் பேச தொடங்கியுள்ளனர். இதனையடுத்து காதலனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை வரவே, நேற்று முன்தினம் பெங்களூரில் இருந்து அந்த பெண் கொச்சிக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் திரூருக்கு சென்று அங்குள்ளவர்களிடம் தன்னுடைய காதலன் பெயரை கூறி விசாரித்தார். இதுகுறித்த தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ரவி சந்தோஷ் தலைமையிலான பொலிசார் இளம்பெண்ணை திரூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட வாலிபர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும், கேரளாவில் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மலேசிய நாட்டு இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
About the Author
Posted by NIsha
on 12:21 AM. Filed under
விந்தை உலகம்
.
You can follow any responses to this entry through the RSS 2.0.
Feel free to leave a response
By NIsha
on 12:21 AM. Filed under
விந்தை உலகம்
.
Follow any responses to the RSS 2.0. Leave a response