Headlines
Published On:Wednesday, September 4, 2013
Posted by NIsha

ஆபாச படத்தில் மனைவியை கண்டு அதிர்ந்த கணவர்!



நாகர்கோவிலில் மனைவி, வேறு ஒரு ஆணுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச சி.டி.யை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் அந்த சி.டி. ஆதாரத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். முதலில் மறுத்த மனைவி பின்பு ஒப்புக் கொண்டார். ஆனால் அருகில் இருப்பது கணவன் என கூறியதால் குழப்பம் ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஆபாச சி.டி.க்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

அந்த பகுதியில் நண்பர்கள் சிலர் வாங்கிய ஆபாச சி.டி.யை போட்டு ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு அந்த படத்தில் உல்லாசமாக இருந்த பெண்ணின் படத்தை பார்த்ததும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த பெண், அவருடைய நெருங்கிய நண்பரின் மனைவி ஆவார்.

இந்த தகவலை அறிந்த மற்ற நண்பர்களும் அதிர்ச்சி அடைந்து, அது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரிடம் தெரிவிக்க முடிவு செய்தனர். அதன்படி, நாகர்கோவில் அருகே வசிக்கும் கணவனிடம் அந்த சி.டி.யை கொடுத்தனர்.

கணவன் அந்த சி.டி.யை போட்டு பார்த்தபோது, அவருடைய மனைவி மற்றொரு வாலிபருடன் உல்லாசமாக இருந்த காட்சியை பார்த்து அதிர்ந்துவிட்டார். 15 நிமிட நேரம் ஓடிய அந்த காட்சியை பார்த்தபின், மனைவியிடம் அதுபற்றி குறிப்பிட்டு தகராறு செய்தார்.

இந்த தம்பதியினருக்கு கல்லூரியில் படிக்கும் வயதில் மகன் இருக்கிறார். இந்த நிலையில் மனைவியின் ஆபாச படத்தை பார்த்த கணவன் மனைவியுடன் தொடர்ந்து குடும்பம் நடத்த மறுத்துவிட்டார். அவர், மனைவியின் குடும்பத்தினரை அழைத்து, தங்களுடன் அழைத்துச்சென்றுவிடும்படி வற்புறுத்தினார்.


இரு தரப்பு குடும்பத்தினராலும் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியவில்லை. இதனால் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சி.டி. யுடன் சென்ற கணவர் மனைவி பற்றி புகார் கூறினார்.

கள்ளக்காதல் விவகாரம் குறித்து பல்வேறு வகையான புகார்களை பார்த்துள்ள போலீசாருக்கு, ஆனால் மனைவி மற்றொருவருடன் உல்லாசமாக இருந்த சி.டி. ஆதாரத்துடன் வந்துள்ள புகார் அதிர்ச்சியை அளித்தது.

இந்த புகார் குறித்து இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சி.டி.யில் உள்ள காட்சி குறித்து மனைவியிடம் விசாரித்த போது படத்தில் இருப்பது நான் இல்லை என்று கண்ணீர்மல்க மறுத்தார். தீவிர விசாரணைக்கு பிறகு “அந்த காட்சியில் இருப்பது நான் தான். படம் பிடித்து இருக்கும் இடமும் எங்கள் வீடு தான். ஆனால், என் அருகில் இருப்பது கணவர்தான்” என்றார்.

‘பளிச்’சென்று அடையாளம் தெரியும் அளவுக்கு அந்த ஆணின் முகம் தெளிவாக தெரியாததால், குழப்பம் ஏற்பட்டாலும், சி.டி. காட்சியில் இருப்பது நான் இல்லை என்று, கணவர் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், இந்த ஆபாச காட்சி, ஊரில் பலருடைய செல்போனில் பதிவாகி இருக்கும் தகவலையும் கூறினார்.

போலீசார் கணவரை சமாதானம் செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், மனைவியை பிரிவதில் கணவர் உறுதியாக இருந்தார். இறுதியில் மனைவி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

About the Author

Posted by NIsha on 10:17 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 10:17 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "ஆபாச படத்தில் மனைவியை கண்டு அதிர்ந்த கணவர்!"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive