Published On:Sunday, September 1, 2013
Posted by NIsha
கணவரை கொன்று சமைத்து சாப்பிட்ட பெண்ணால் பரபரப்பு
சீனாவில் கொடுமைப்படுத்திய கணவரை பெண் ஒருவர் கொன்று சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த பெண், நபர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர், பின்பு மனைவியையும், மகளையும் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் 2-வது கணவருக்கு போதை மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்திருந்தார். இதனை தொடர்ந்து 3 நாட்களாக அறைகளில் அடைத்து வைத்து சாப்பாடு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் வைத்துள்ளார். மேலும் அவரை அடித்து உதைத்ததில், இறந்து விட்டார். கொலையை மறைப்பதற்காக அவரது உடலை துண்டு துண்டாக நறுக்கி சமைத்து சாப்பிட்டுள்ளார். இதுபற்றி தகவல் தெரியவர, விரைந்து சென்ற பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்தனர்


