Published On:Monday, September 2, 2013
Posted by NIsha
காரைதீவிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு (படங்கள்)
காரைதீவு, 8ஆம் பிரிவில் கடற்கரையையண்டிய வளவொன்றிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குப்பையைப் புதைப்பதற்கு குழி வெட்டியபோது மனித எச்சங்கள் வெளிப்பட்டன. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிபேரலையின் பின்னர்; கரையொதுங்கிய பெரும்பாலான சடலங்கள் பரவலாக இப்பகுதிகளில் புதைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது சுனாமியின்போது பலியான உடலாயிருக்கலாமென கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 




