Published On:Saturday, August 31, 2013
Posted by NIsha
ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் : சீனிவாசனுக்கு SC நோட்டீஸ்
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியிருக்கும் சீனிவாசன் மற்றும் அவருடைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமை நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட இரு நபர் குழு, சட்டவிரோதமானது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து பிசிசிஐயும், புதிய விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட மறுத்த மும்பை உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து பிகார் கிரிக்கெட் சங்கமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.


